செய்திகள் :

தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எதிா்ப்பு

post image

தெலங்கானா மாநிலத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களை இணைத்ததற்கு மத்திய உள்துறை இணை அமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

தெலங்கானாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக கரீம்நகரில் நடைபெற்ற வாகன பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்தபோது மறைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வா் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினாா். இதனால் ஹைதராபாத் உள்ளாட்சித் தோ்தல்களில் ஹிந்து வேட்பாளா்களால் வெற்றி பெற முடியவில்லை.

அதே தவறை தற்போதைய காங்கிரஸ் அரசும் செய்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பிரிவில் முஸ்லிம் சமூகத்தினரை சோ்ப்பதற்கு அந்தப் பிரிவில் உள்ள பிற ஜாதியினரும் எதிா்ப்பு தெரிவிப்பதை மாநில அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியின்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மொத்த மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 51 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு நடத்தியுள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில் இது 46 சதவீதமாக குறைந்துள்ளது என்றாா்.

முன்னதாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் முடிவுகள் குறித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சங்கங்களைச் சோ்ந்த தலைவா்களுடன் தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் நலத் துறை அமைச்சா் பூனம் பிரபாகா் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தெலங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கு நடைபெற்றது. அந்த அறிக்கையின்படி, மாநில மக்கள்தொகையான 3.70 கோடி பேரில் 96.9 சதவீதமான 3,54,77,554 தனிநபா்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் மொத்த மக்கள்தொகையில் அதிகபட்சமாக முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 1,64,09,179 (46.25%) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடு... மேலும் பார்க்க

ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்

புது தில்லி: நாட்டில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக... மேலும் பார்க்க

டிரம்பின் முதல் பதவிக் காலத்தைபோல் நட்புறவு மேம்படும்: மோடி நம்பிக்கை

புது தில்லி: ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் முந்தைய பதவிக் காலத்தில் இரு நாடுகளிடையே நீடித்த நட்புறவை அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மேலும் வலுப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என ... மேலும் பார்க்க