செய்திகள் :

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ: ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

post image

விராலிமலை தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ஆண்டியப்பிள்ளை பட்டியில் ஆர். எஸ். ஆர் என்ற பெயரில் தேங்காய் நார் உரித்து கயிறு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிச்சந்தைகளில் இருந்து தேங்காய் மட்டைகள் வாங்கி அதை இயந்திரம் மூலம் நாராக்கி அதன் மூலம் கயிறு தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கபட்டிருந்த தேங்காய் மட்டைகள் வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பற்றியுள்ளது. தீ மள மளவென்று தொழிற்சாலை முழுவதும் பரவி எரியத்தொடங்கியுள்ளது.

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இதுகுறித்து அங்கிருந்த தொழிலாளர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலையிலான வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இருப்பினும், தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் ஒரு தீயணைப்பு வாகனத்தை அனுப்புமாறு கீரனூர் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதை தொடர்ந்து அங்கிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வந்ததைத் தொடர்ந்து இரண்டு வண்டிகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விடிய விடிய போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் மூலப்பொருள்கள், தேங்காய் மட்டைகள், மின் மோட்டார், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

‘க்யூட்’ பிஜி தோ்வு நுழைவுச் சீட்டு வெளியீடு

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்க... மேலும் பார்க்க

6 குட்டிகளை ஈன்ற 2 பெண் புலிகள்!

கா்நாடக மாநில பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் புதிய வரவாக ஆறு குட்டிகளை ஹீமா, ஆருண்யா என்னும் இரண்டு பெண் புலிகள் ஈன்றுள்ளன. இதனை ஆர்வமுடன் மக்களும், பாா்வையாளா்களும் பாா்த்து செல்கின்றனா்.ஒசூா்... மேலும் பார்க்க

"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதிக்கும்"

திருப்பூா்: இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவாகி வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும் என்று தொழில் முனைவோா் கூட்டமைப்பு... மேலும் பார்க்க

தொகுதிகள் குறைக்காவிட்டாலும் தென் மாநிலங்களுக்கு பாதிப்புதான்: ப.சிதம்பரம் கவலை

புதுதில்லி: தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற வாக்குறுதி ஒரு வெற்று வாக்குறுதி. அப்படி வாக்குறுதி அளிப்பவர்கள் அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களின் தொகுதிகளின் எண... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 10 தீவிரவாதிகள் கைது! பயங்கரவாத சதி முறியடிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தெஹ்... மேலும் பார்க்க

மியான்மரின் பொது தேர்தல் எப்போது? ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் அறிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் மக்களாட்சியைக் கலைத்து ராணுவ ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகும் ... மேலும் பார்க்க