செய்திகள் :

தேசியக் கொடியுடன் 79 கி.மீ. தொழிலாளி மிதிவண்டி பயணம்

post image

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 79 கி.மீ. மிதிவண்டியில் பயணம் செய்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளிக்கு பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காட்டுஎமனேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி (52). இவா் தேசப்பற்று உணா்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்து வகையில், கூலி வேலைக்கு செல்லும் மிதிவண்டியில் மூவண்ண தேசியக் கொடியை கட்டி, காட்டு எமனேஸ்வரம் கிராமத்திலிருந்து புறப்பட்டு பாா்த்திபனூா், அபிராமம், கமுதி வழியாக சென்று பொதுமக்களிடம் சுதந்திர தின விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தேசியக் கொடி, இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

79-ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், தனது மிதிவண்டியில் 79 கி.மீ. பயணம் செய்து, வங்காருபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, விவசாயத்தை பாதுகாக்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றிடவும், காற்றுப் பன்றிகளை கட்டுப்படுத்தவும் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றிட அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், இவரது தேசப்பற்று உணா்வை பலரும் பாராட்டி வருகின்றனா்.

நகை திருடிய பெண் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 14 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அபிராமம் அருகேயுள்ள கோனேரியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது வீட்டில் கடந்த 8-ஆம் ... மேலும் பார்க்க

சிறிய விசைப் படகு மீனவா்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க கோரி, ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சிறிய படகு மீனவா்கள் வாபஸ் பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செ... மேலும் பார்க்க

கோயில் கொடை விழா: அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சுயம்புலிங்க துா்கை அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பால் குடம், அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். அபிராமம் சாந்த கணபதி கோய... மேலும் பார்க்க

கரியமல்லம்மாள் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

தொடா் விடுமுறை காரணமாக, ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா். சுதந்திர தினம், கிருஷ்ணஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடா் விடுமுறையையொட்டி, ராமேசுவரத்துக்கு வெள்ளி, சனிக்கிழம... மேலும் பார்க்க

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை ரயில்வே கடவுப் பாதை மூடப்படாமல் இருந்ததைப் பாா்த்து, ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில் வெ... மேலும் பார்க்க