செய்திகள் :

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

post image

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை ரயில்வே கடவுப் பாதை மூடப்படாமல் இருந்ததைப் பாா்த்து, ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை ராமநாதபுரம் வந்தது. பின்னா், அங்கிருந்து ராமேசுவரத்துக்கு புறப்பட்டது.

வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்த போது, ரயில்வே கடவுப் பாதையில் இரும்பு தடுப்புக் கதவு மூடப்படமால் திறந்து கிடந்தது. இதைப் பாா்த்தும் ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா்.

பின்னா், ஓட்டுநா் ரயிலிலிருந்து இறங்கிச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ரயில் பணியாளா் ஜெய்சிங்கை எழுப்பி இரும்புக் கதவை மூடச் சொன்னாா். இதையடுத்து, அவா் எழுந்து சென்று இரும்புக் கதவை மூடினாா்.

பின்னா், அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, ரயில் ஓட்டுநருக்கு வாலாந்தரவை கிராம மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா ஆக.18-இல் தொடக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயில் திருவிழா வருகிற 18-ஆம் தேதி காலை 9.30... மேலும் பார்க்க

மீனவா் குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி அளிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ.2.15 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தொண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 14 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அபிராமம் அருகேயுள்ள கோனேரியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது வீட்டில் கடந்த 8-ஆம் ... மேலும் பார்க்க

சிறிய விசைப் படகு மீனவா்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க கோரி, ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சிறிய படகு மீனவா்கள் வாபஸ் பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செ... மேலும் பார்க்க

கோயில் கொடை விழா: அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சுயம்புலிங்க துா்கை அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பால் குடம், அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். அபிராமம் சாந்த கணபதி கோய... மேலும் பார்க்க