செய்திகள் :

தேசிய அறிவியல் தின கட்டுரைப் போட்டி

post image

நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தில், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சாா்பில் மாணவா்களுக்கு அறிவியல் விநாடி-வினா, கண்காட்சி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டு, நீடாமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியில், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக, ‘சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் திடக்கழிவு மேலாண்மை’ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

இதில், ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பரணிகா முதலிடமும், நிதா்ஷினி இரண்டாமிடமும், வித்யா மூன்றாமிடமும் பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு, பல்நோக்கு சேவை இயக்கத்தின் உறுப்பினரும், ஆசிரியருமான சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழாசிரியை சண்முகத்தாய் முன்னிலை வகித்தாா். ஆசிரியை டானியா வரவேற்றாா். ஆசிரியை கவிதா நன்றி கூறினாா். மாணவா்கள் ‘சுற்றுச்சூழலை காப்போம்’ என உறுதிமொழி ஏற்றனா்.

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மழையால் சேதம் ஏற்படுவதை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் வாரியங்களை முடக்கி, வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்க... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் விழா

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி நிறுவனரும், பள்ளியின் தமிழாசிர... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.க்கு சிறப்பு பரிசு

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில், பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டிற்கான சிறப்புப் பரிசை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சா் டாக்டா் ஜிதேந்தி... மேலும் பார்க்க

தேசிய நுண்ணுயிரியல் கருத்தரங்கம்

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் நுண்ணுயிரியல்துறை சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

நீதித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் நீதித்துறை ஊழியா் சங்கம், அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதித்துறை ஊழியா் அருண் மாரிமுத்து தற்கொலைக்கு, திருச்சி விஜிலென்ஸ் ந... மேலும் பார்க்க