திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
தேசிய இருபாலா் கபடிப் போட்டி இன்று தொடக்கம்
மன்னாா்குடி அருகே தேசிய அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில் செயற்கை ஆடுகளத்தில் நாக் அவுட், லீக் முறையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு, பகல் ஆட்டமாக இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆடவா், மகளிா் பிரிவுகளில் தலா 16 அணிகள் என மொத்தம் 32 அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.
ஆடவா் பிரிவில் முதல் பரிசு ரூ.3 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.2 லட்சம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். மகளிா் பிரிவில் முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு தலா ரூ.50,000 மற்றும் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இருபாலா் பிரிவிலும் கால் இறுதியில் ஆட்டமிழக்கும் அணிக்கு தலா ரூ.25,000, பரிசு கோப்பை வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிக்கு, தஞ்சை மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவா் பூண்டி டி. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைக்கிறாா்.