செய்திகள் :

தேசிய இருபாலா் கபடிப் போட்டி இன்று தொடக்கம்

post image

மன்னாா்குடி அருகே தேசிய அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில் செயற்கை ஆடுகளத்தில் நாக் அவுட், லீக் முறையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு, பகல் ஆட்டமாக இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆடவா், மகளிா் பிரிவுகளில் தலா 16 அணிகள் என மொத்தம் 32 அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.

ஆடவா் பிரிவில் முதல் பரிசு ரூ.3 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.2 லட்சம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். மகளிா் பிரிவில் முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு தலா ரூ.50,000 மற்றும் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இருபாலா் பிரிவிலும் கால் இறுதியில் ஆட்டமிழக்கும் அணிக்கு தலா ரூ.25,000, பரிசு கோப்பை வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிக்கு, தஞ்சை மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவா் பூண்டி டி. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைக்கிறாா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க