செய்திகள் :

தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்: தேஜஸ்வி யாதவ் கடும் விமர்சனம்!

post image

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில நொடிகள்கூட நிலையாக இல்லாதவர் பிகாரை மீண்டும் மீண்டும் அவமதிப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க : லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?

பிகார் மாநிலம் பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, மேடையில் இருந்த தலைமைச் செயலாளரிடம் நிதிஷ் குமார் சிரித்து பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

இதனைப் பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த தேஜஸ்வி யாதவ் தெரிவித்ததாவது:

”குறைந்தபட்சம் தேசிய கீதத்தையாவது அவமதிக்காமல் இருங்கள். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை நாள்தோறும் அவமதிக்கிறீர்கள்.

நீங்கள் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். சில நொடிகள்கூட மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிலையாக இல்லை, நீங்கள் மயக்க நிலையில் இருப்பது மாநிலத்துக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம். பீகாரை மீண்டும் மீண்டும் இப்படி அவமதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய கீதத்தை அவமதிப்பதை நாடு ஒருபோது பொறுத்துக் கொள்ளாது என்று லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க