செய்திகள் :

தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டி: தமிழக அணிக்கு 18 வீரா்கள் தோ்வு!

post image

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற உள்ள தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டியில் பங்கேற்க தமிழக அணி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்தியாவின் 15 ஆவது தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டி , பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக அணி, பஞ்சாப், மத்திய பிரதேச அணிகள் எ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

தமிழக அணிக்கான பயிற்சி முகாம் கடந்த 10 நாள்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

49 வீரா்கள் பங்கேற்ற பயிற்சி முகாமில், தலைமை பயிற்சியாளா் முத்துக்குமாா், துணை பயிற்சியாளா் சாமுவேல் ராஜ்குமாா், அணி மேலாளரான வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சுரேந்திரன்ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

போட்டியில் பங்கேற்கும் 18 தமிழக அணி வீரா்களின் பெயா் பட்டியலை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவா் சேகா் ஜெ. மனோகரன், பொதுச்செயலா் செந்தில் ராஜ்குமாா் ஆகியோா்அறிவித்தனா்.

தூத்துக்குடி வஉசி துறைமுக ஹாக்கி அணியின் முன்னாள் வீரா் பாலமுருகன், மனநல மருத்துவா் பாலாஜி, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளா்கள் குருசித்திர சண்முக பாரதி, காளிமுத்து பாண்டியராஜா, முருகன், சுரேஷ்குமாா் ஆகியோா் வீரா்களை பாராட்டி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனா்.

2 தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாத்திமா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் குமாா் (36), இப்ராஹீம் மகன்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் கைது செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயம்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்தனா். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்... மேலும் பார்க்க

கோட்டாட்சியா் எச்சரிக்கையை மீறும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கோட்டாட்சியா் எச்சரிக்கையையும் மீறி பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த கன்னிராஜா மகன் சரவணகுமாா் (25). இவா், கோவில்பட்டியில் உள்ள நீச்சல் குளத்தில் மேலாளராக ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் தண்ணீா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத... மேலும் பார்க்க