செய்திகள் :

தேனி : போலி நகை விற்பனை செய்தவர் கொன்று புதைப்பு; 7 பேர் கைது - நடந்தது என்ன?

post image

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரும் இவரது சகோதரி மகன் கழுவா என்பவரும் (37) தேனி மாவட்டத்தில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

உயிரிழந்த திலீப்

அப்போது மோகனிடம் போலி நகைகளை விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவரையும் தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு மோகன் அழைத்துள்ளார். பின்னர் முகேஷ் என்பவர் கார் மூலம் இருவரையும் தேனி அருகே உள்ள ஜெயக்குமார் என்பவரின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று இருவரையும் போலி நகை குறித்து கேட்டு தாக்கியுள்ளனர்.

இதில் கழுவாவை மட்டும் இங்கிருந்து ஓடிவிடு இல்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்து திலீப்பை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த திலீப் உறவினர் நிர்மலா (47) தேனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீஸார் வழக்கு பதிவு செய்து, முகேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் மேலும் ஜெயக்குமார், முருகன், ஆகாஷ், முத்துப்பாண்டி, சதீஷ்குமார், சௌமியன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைதானவர்கள்

விசாரணையில் திலிப் மற்றும் கழுவா தங்களிடம் போலி நகைகள் ஏமாற்றி விற்பனை செய்து 2 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், இதனால் இருவரையும் அழைத்து சென்று அடித்து விசாரித்ததாகவும் இதில் திலிப் உயிரிழந்துவிட்டதால் வேறு வழியின்றி அருகே உள்ள தோட்டத்திற்கு எடுத்துச் சென்று திலிப்பின் உடலை புதைத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் முருகனை அழைத்து வந்து திலீப்பின் உடல் புதைக்கப்பட்ட இடத்தினை அடையாளம் கண்ட பின் பெரியகுளம் தாசில்தார் மருது, தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்தர் முன்னிலையில் ஜேசிபி உதவியுடன் மண் தோண்டப்பட்டு உடல் கண்டெடுக்கபட்டது.

கைதானவர்கள்

பின் மருத்துவர்கள் பிரதே பரிசோதனை செய்யப்பட்ட பின் திலீ ப் உடல்தான் என கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரின் உடலை அவரது உறவினர்கள் கோரிக்கை அடுத்து தேனி மின்மயானத்தில் உடல் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி: `பாஜக பிரமுகரை காவு வாங்கிய பாரதியார் நிலம்!’ - பழிக்குப் பழியா… பகைக்கான விலையா ?

விபசார வழக்கில் கைதுபுதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் அகில இந்திய OBC பிர... மேலும் பார்க்க

பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி; நடிகை நேகா வீட்டில் மாயமான ரூ.34 லட்சம் மதிப்பிலான நகை - வழக்கு பதிவு

பாலிவுட் நடிகை நேகா மாலிக், மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஷானாஸ் முஸ்தபா ஷேக் என்ற பெண் வேலை செய்து வந்தார். நடிகை நேகா அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடியவர் என்ப... மேலும் பார்க்க

MyV3Ads: `பணம் கிடைக்கவில்லை என்றால்...' - காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து ... மேலும் பார்க்க

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை; புகாரை கூட ஏற்காத போலீஸ் - வழக்கு கடந்து வந்த பாதை

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர... மேலும் பார்க்க

`போலி’ ஆன்லைன் கோர்டில் குற்றவாளியாக அறிவிப்பு - 71 வயது மூதாட்டியிடம் ரூ.4.82 கோடி அபகரிப்பு

மும்பையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் பொதுமக்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்ற... மேலும் பார்க்க

தகராறு முற்றியதால் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்த கணவர்; நிர்க்கதியான 3 குழந்தைகள்; நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், கீழக்காயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள் என்று மூன்று குழ... மேலும் பார்க்க