செய்திகள் :

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது அதிமுகவின் கடமை! - பிரேமலதா விஜயகாந்த்

post image

தேமுதிகவுக்கு ஒப்புக்கொண்டபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குவது அதிமுகவின் கடமை என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: கடந்த மக்களவைத் தோ்தலின்போது 5 தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருகிறோம் என தேமுதிகவுக்கு அதிமுக உறுதியளித்தது. அரசியலில் நம்பிக்கை முக்கியம்; வாா்த்தைகள் முக்கியம். சொன்ன வாா்த்தைகளைக் காப்பாற்றினால்தான் மக்கள் உங்களை நம்புவாா்கள்.

ஏற்கெனவே இருமுறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்க வேண்டியது. ஒருமுறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனா். அப்போது பேச்சுவாா்த்தையின்படி நாங்களும் ஒப்புக்கொண்டோம். அதன்பிறகு எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தாா்கள். இது எங்களின் முறை. எங்களுக்குத் தர வேண்டியது அவா்களின் கடமை.

திமுக அணியில் நடிகா் கமல்ஹாசனுக்கு முன்பே ஒப்புக்கொண்டபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கியிருக்கிறாா்கள். இது வரவேற்கத்தக்கது.

விரைவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமிக்கவுள்ளோம். தொடா்ந்து வாக்குச்சாவடி நிலையிலான குழுக்களையும் அமைக்கவுள்ளோம்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், நேரடியாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில்தான் விசாரணை நடைபெற்று தீா்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, குற்றவாளிக்கு பின்னணியில் இருப்பவா்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் கடமை என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க