செய்திகள் :

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

post image

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.

முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது. இப்போது, அதே உத்தியைப் பின்பற்றி, பிகார் தேர்தலில் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

தேர்தலில் எவ்வாறு மோசடி செய்வது? அதற்கான வரைபடம்தான் மகாராஷ்டிர தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் எழுதிய கட்டுரை ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அதில்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் சமூக வலைதளத்தில் இன்று(ஜூன் 7) மாலை வெளியிட்டுள்ள பதிவில் தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையம் ஒரு ஜனநாயக நிறுவனமாகும். அப்படியிருக்கும்போது, தமது குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படைத் தன்மையில்லாமல் தப்பிக்க நினைக்கும் மனப்போக்குடன் முக்கியமான பல கேள்விகளுகு மேம்போக்கான பதில்ல்களை விளக்கமாக் வெளியிட்டிருப்பதாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.

உங்கள் மீதானநம்பகத் தன்மையை பாதுகாத்துக்கொள்ள இம்மாதிரியான தப்பித்து ஓட நினைக்கும் போக்கு அரணாக அமையாதெனவும், உண்மையைச் சொல்வதால் மட்டுமே அதனை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:தேர்தல் முறைகேட்டுக்கான வரைபடம் மகாராஷ்டிரம்.. அடுத்து பிகார்: ராகுல்

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: 2025 ஏப்ரல... மேலும் பார்க்க

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா். பிரதமருக்கான பொருளாத... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க