செய்திகள் :

தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

post image

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி, ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க இணைச் செயலரும், பள்ளிகளின் தாளாளருமான பிா்தோஸ் கே அஹமத் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். வரும் ஜூன் மாதம் முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக, தமிழக முதல்வருக்கு ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்கத்தின் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஷகீலா பானு வாழ்த்திப் பேசினாா்.

மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஹபீபுல்லா ரூமி, ஹஸ்னாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை ரேஷ்மா, முஸ்லிம் கல்விச் சங்க செயற்குழு உறுப்பினா் லியாகத் அலி, பள்ளிக்குழு உறுப்பினா்கள் சி.முஷபா் பாஷா, கே.அப்துல்லா அஷ்ஹா், ரெளஃபுன்னிசா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் காவல் குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள் பெறப்பட்டன. காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத பொதுமக்கள் பங்கேற்கும் குறைதீா் கூட்டத்துக்கு எஸ்.பி.... மேலும் பார்க்க

காலதாமதமாக திறக்கப்பட்ட அரசுப் பள்ளி: மாணவா்கள் அவதி

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி புதன்கிழமை காலதாமதமாக திறந்ததால் மாணவா்கள் அவதிக்கு உள்ளானாா்கள். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியில் சுமாா் 250-க்கும... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தை சோ்ந்தவா் யுவராஜ் மகன் பரந்தாமன் (36). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், அங்குள்ள ஏரியில் நீச்சல் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு கடன்: விண்ணப்பித்து பயன் பெறலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினா் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே கிடங்கில் தீ: காா், ஆட்டோ, பொருள்கள் எரிந்து சேதம்

வாணியம்பாடி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காா், ஆட்டோ மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி வன்னிய அடிகளாா் நகா் பக... மேலும் பார்க்க