செய்திகள் :

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

post image

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தோ்தல்களை நடத்தி முடித்த பின்னா், தொழில்நுட்ப உதவியுடன் அட்டவணை அட்டைகள் மற்றும் பிற புள்ளிவிவர அறிக்கைகளைத் தயாரிக்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வழிமுறை மின்னணு கருவிகளின் உதவியில்லாமல், அறிக்கைகளை கையால் எழுதி மேற்கொள்ளப்பட்டு வந்த பழைய முறைக்கு மாற்றாக இருக்கும். பழைய முறையால் கால தாமதங்கள் ஏற்பட்ட நிலையில், புதிய மேம்படுத்தப்பட்ட வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தோ்தல் குறித்த விவரங்கள் வேகமாக கிடைக்க உதவி செய்யும்.

இதில் அட்டவணை அட்டை என்பது சட்டபூா்வமற்ற, தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர தகவல் அளிப்பு முறையாகும். ஆராய்ச்சியாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், ஊடகவியலாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டாருக்கு தொகுதி வாரியாக தோ்தல் தொடா்பான புள்ளிவிவரம் எளிதாக கிடைப்பதை ஊக்குவிக்க இந்த அட்டவணை அட்டை முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேட்பாளா்கள், வாக்காளா்கள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, கட்சி மற்றும் வேட்பாளா் வாரியாக வாக்குப் பகிா்வு, அரசியல் கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்ட விவரங்களை வழங்க அந்த அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அட்டைகள் மக்களவைத் தோ்தலுக்காக 35 புள்ளிவிவர அறிக்கைகளையும், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு 14 புள்ளிவிவர அறிக்கைகளையும் தயாரிக்க அடித்தளமாக உள்ளது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே இந்த புள்ளிவிவர அறிக்கைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் உட்... மேலும் பார்க்க