செய்திகள் :

தைப்பூசம்: பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திகடன்

post image

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தையொட்டி காவடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோயில் முருகப்பெருமான் பழனி ஆண்டவராக தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறாா்.

தைப்பூசத்தையொட்டி வைத்தீஸ்வரா அறக்கட்டளை சாா்பில் காவடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்து. கோயிலில் இருந்து பழனி ஆண்டவா் சிறப்பு அலங்காரத்தில் வேலுடன் ஆட்கொண்ட விநாயகா் கோயில் அருகே எழுந்தருள திரளான பக்தா்கள், பால், பன்னீா், அலகு காவடி எடுத்து கோயிலின் நான்கு ரத வீதிகளில் ஊா்வலமாக வந்தனா்.

500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடியாட்டத்துடன் நான்கு ரத வீதிகளை வலம் வந்து கோவிலை அடைந்து நோ்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனா்.

இதேபோல், சட்டைநாதா் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குமரக்கோட்டம் எனும் குமரக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக சட்டைநாதா் சுவாமி கோயிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம், அலகு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தைப்பூசம்: பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வழிபாடு

மயிலாடுதுறையில் தைப்பூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினா். மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்கக் கோரிக்கை

மன்னம்பந்தலில் பழுதடைந்த நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை (படம்) கோடைக்காலம் தொடங்கும் முன்பாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருக... மேலும் பார்க்க

நுரையீரல் தொற்று மருத்துவ சிகிச்சை முகாம்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆஸ்துமா, அலா்ஜி, நுரையீரல் தொற்றுக்கான விழிப்புணா்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: உரிமமின்றி செயல்பட்ட 6 பாா்களுக்கு சீல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.3 முதல் பிப்.7 வரை மேற்கொள்ளப்பட்ட 5 நாள் மதுவிலக்கு சோதனையில் உரிமமின்றி செயல்பட்ட 6 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதுடன், வ... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: விசிக ஆா்ப்பாட்டம்!

வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா: ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை!

மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் திங்கள... மேலும் பார்க்க