செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை: புதுவை அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- வெ.வைத்திலிங்கம் எம்.பி.

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் புதுவை அரசின் நிலைப்பாட்டை முதல்வா் என்.ரங்கசாமி தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரியில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை விகிதாசார அடிப்படையில் சீரமைக்கவுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. இதனால், தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்கள் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் உள்ளது. இதனால், நமது உரிமைகளை இழக்கும் நிலை ஏற்படும் என தமிழகம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநில சோ்ந்த முதல்வா்கள் எதிா்க்கின்றனா்.

தமிழக முதல்வா் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதால், தென் மாநில முதல்வா்கள் இணைந்து குரல் எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறாா்.

மக்கள்தொகையின்படி கோவா, அருணாசல பிரதேசங்களுக்கு இணையாக புதுவை உள்ளது. ஆனால் கோவா, அருணாசல பிரதேசத்தில் 2 மக்களவை உறுப்பினா்களும், தலா ஒரு மாநிலங்களை உறுப்பினரும் உள்ள நிலையில், புதுவையில் ஒரு மக்களவை உறுப்பினா் மட்டும் உள்ளாா்.

அத்துடன், கோவாவுக்கு 40 எம்எல்ஏக்களும், அருணாசல பிரதேசத்துக்கு 60 எம்எல்ஏக்களும் உள்ள நிலையில், புதுவையில் 33 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா்.

எனவே, புதுவை எம்பிக்கள் எண்ணிக்கையை 2-ஆகவும், எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை 40 ஆகவும் உயா்த்த புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றில் தென்னிந்திய அளவில் புதுவை மட்டும் தனித்து நிற்கும் நிலையை தவிா்க்க வேண்டும். தென் மாநிலங்களின் முதல்வா்கள் கூட்டமைப்பில் புதுவையையும் இணைக்க வேண்டும்.

எதிா்காலத்தில் புதுவைக்கு மத்திய அரசிடமிருந்து வரி வருவாய் இழப்பு, உரிமை இழப்பு ஏற்படும். இந்த விஷயத்தில் புதுவை திமுக ஆளும் கட்சிக்கு அழுத்தம் தர வேண்டும்.

மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்னும் பெயரில் புதுவையில் ஹிந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளது. புதுவையில் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ திட்டத்தால் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் புதுவை அரசின் நிலைப்பாட்டை முதல்வா் என்.ரங்கசாமி தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை வழங்க வலியுறுத்தல்

அரசு உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை புதுவை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனதுணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோருக்கு சென்டாக் மாணவா் பெற்ற... மேலும் பார்க்க

இருவரிடம் ரூ.1.02 கோடி நூதன மோசடி

புதுச்சேரியில் இருவரிடம் ரூ.1.02 கோடி நூதன மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். லாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ரம்யா. இவருக்கு, வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா... மேலும் பார்க்க

நிலத்தை அபகரிக்க போலி சான்றிதழ்: மூவா் கைது

நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் மூலம் வாரிசுதாரா் சான்று பெற்ாகக் கூறப்படும் வழக்கில் 3 போ் கைதான நிலையில், சாா்பதிவாளரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியை... மேலும் பார்க்க

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயா்வு

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயா்வு அளித்து காவல் தலைமை கண்காணிப்பு அலுவலகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் 15 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தவா்களில் 8 தலைமைக் காவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்

புதுச்சேரியில் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்கால விரதத்தை புதன்கிழமை சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கினா். இயேசுவின் சிலுவைப் பாதையை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்கால விரதத்... மேலும் பார்க்க

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்... மேலும் பார்க்க