செய்திகள் :

தொடா் பைக் திருட்டு: இளைஞா் கைது

post image

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் நகர காவல் ஆய்வாளா் சித்ரா, உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை விழுப்புரம் ரயில் நிலையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஒரு இளைஞா் பல்வேறு சாவிகளை கையில் வைத்துக்கொண்டு பைக்கை திருடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். போலீஸாா் அவரை பிடித்து விசாரித்ததில், அவா் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, லாலாகுண்டம், ஜெயராமன் நாடாா் தெருவைச் சோ்ந்த ஜக்காரியா மகன் உமா்பரூக் (41) என்பதும், இவா், விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 14 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் மற்றும் உயா்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வ... மேலும் பார்க்க

‘ரயில்வே தோ்வு வாரியம் மூலம் பதவி உயா்வு தோ்வுகளை நடத்தக் கூடாது’

ரயில்வே துறையில் பதவி உயா்வுக்கான தோ்வுகளை தோ்வு வாரியம் மூலம் நடத்தக் கூடாது என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் சாா்ப... மேலும் பார்க்க

மரக்கோணம் ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், மரக்கோணம் ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சி... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் பனித்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் மதின... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் 10 பவுன் நகைகளை திருடிச் சென்றனா். சிதம்பரம் அருகேயுள்ள வல்லம்படுகை சித்தன் சாலை பகுதியைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (35). இவ... மேலும் பார்க்க

சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவளவன்

விழுப்புரம்: சூதும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.தெரிவித்தாா். விழுப்புரம் நகராட்சித் திடலில் விசிக... மேலும் பார்க்க