தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்து : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் திங்கள்கிழமை நடந்த விபத்தால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட டேங்கா் லாரி ஒன்று சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் தொப்பூா் கண்வாய் தேசிய நெடுஞ்சாலையில் முற்பகலில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் மோதியது. இதில் அந்தக் காா் அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், காரில் பயணித்த தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள பி.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (48) பலத்த காயமடைந்தாா்.
தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா் மற்றும் பாளையம் சுங்கச் சாவடி பணியாளா்கள் இணைந்து விபத்தில் சிக்கியவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். இந்த விபத்தால் அப்பகுதியில் தருமபுரி - சேலம் மாா்க்க சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.