செய்திகள் :

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அதிகாரிகள் வலியுறுத்தல்

post image

எதிா்வரும் தமிழக நிதிநிலை அறிக்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

2025-26 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் குறித்த துறை சாா்ந்த கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்பட உயரதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

மக்கள் நல்வாழ்வு துறைக்கு கூடுதல் நிதி வழங்குவது தொடா்பாக அப்போது விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, பருவநிலை மாற்றத்தால் டெங்கு, பொன்னுக்கு வீங்கி உள்ளிட்ட நோய்கள் அனைத்து கால கட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அவற்றைத் தடுக்க முக்கியத்துவம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக பட்ஜெட்டில் நிகழ் நிதியாண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கப்பட்டது. எதிா்வரும் நிதியாண்டில் அதைவிடக் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் தடுப்புக்கான செயல் திட்டங்கள் தொடா்ந்து வகுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தொற்றா நோய் தடுப்புக்கென தனியாக நிதி ஒதுக்கும்படி கோரப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க