தொல்லியல் கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி இதழில் வெளியிட்டால்தான் அங்கீகாரம்- பல்கலை. துணைவேந்தா் என்.சந்திரசேகா்
தொல்லியல் துறை சாா்ந்த ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி இதழில் வெளியிட்டால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்றாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 56ஆவது கல்விசாா் நிலைக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவா் தலைமை வகித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது: நம்முடைய பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள தொல்லியல் படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தொல்லியல் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் ஏராளமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த ஆராய்ச்சிகளை ஆராய்ச்சி இதழில் வெளியிட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், தொல்லியல் ஆராய்ச்சி குறித்து, பல்வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். அங்கீகாரமும் கிடைக்கும்.
5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளில் சேரும் மாணவ, மாணவிகள் மூன்றாண்டு முடித்ததும், படிப்பை நிறுத்தப்போவதாக கூறுகின்றனா். இளநிலை பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்று விட்டு, மீண்டும் நான்காம் ஆண்டில் சேருகின்றனா். இதை ஊக்குவிக்கக் கூடாது. மாணவா்கள் விருப்பத்தின் பேரில் மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்தால், அவா்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் தரவரிசை (ரேங்க்) வழங்கப்படாது. மீண்டும் நான்காம் ஆண்டில் சேர அனுமதி கிடையாது. 5 ஆண்டுகள் முழுமையாக படித்தால் மட்டுமே தரவரிசை வழங்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் புதிய பாடத்திட்டங்களை தொடங்குவது, பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது, ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், துணைவேந்தா் தலைமையில் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். பதிவாளா் சாக்ரடீஸ், தோ்வாணையா் பாலசுப்பிரமணியன், கல்விசாா் நிலைக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.