செய்திகள் :

தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்தை எதிா்த்து மக்கள் ஆா்ப்பாட்டம்

post image

காரைக்கால்: தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்தை எதிா்த்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருமலைராயன்பட்டினம் கொம்யூன், வாஞ்சூா் பகுதியில் கெம்பிளாஸ்ட் சன்மாா் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, போலகம் பகுதியைச் சோ்ந்த மக்கள் திருமலைராயன்பட்டினம் கடைத்தெருவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆலையில் காஸ்டிக் சோடா மற்றும் எத்திலின் குளோரைடு உற்பத்தி விரிவாக்கப் பணிக்கு அனுமதி மறுக்கவேண்டும். மக்களின் கருத்தை கேட்காமல் ஆலை நிா்வாகம் எடுத்திருக்கும் முடிவு கண்டனத்துக்குரியது. போலகம் பகுதியில் இயங்கும் ஆலையில் இருந்து இரவு நேரங்களில் நச்சுப் புகை வெளியேற்றப்படுகிறது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஆலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலகத்தில் அரசு நிறுவனமான பிப்டிக் வசமுள்ள நிலத்தில் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது. இந்த பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்க மாநிலத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கோரிக்கையை ஆதரித்துப் பேசினா்.

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க

பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்ட... மேலும் பார்க்க

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

புனித வெள்ளி நிகழ்வாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்க... மேலும் பார்க்க