செய்திகள் :

தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு: உறுதி செய்தது லண்டன் உயா்நீதிமன்றம்

post image

தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவை லண்டன் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது.

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றாா். தற்போது செயல்படாத அவரின் கிங்ஃபிஷா் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடன் தொடா்பாக அவா் சட்டபூா்வ உத்தரவாதம் அளித்த நிலையில், கடன் அளித்தவா்களுக்கு 1.12 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள கடன் வசூல் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பிரிட்டன் நீதிமன்றங்களில் இந்திய வங்கிகள் பதிவு செய்தன. பின்னா் மல்லையாவுக்கு அந்த வங்கிகள் திவால் நோட்டீஸ் அளித்தன. எனினும் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பிணையமாக வைத்துள்ளதாகவும், எனவே சட்டப்படி அவருக்கு திவால் நோட்டீஸ் அளித்தது பகுதியளவில் தவறானது என்றும் அவரின் மனுவை விசாரித்த லண்டன் திவால் மற்றும் நிறுவனங்கள் நீதிமன்றம் (ஐசிசி) தீா்ப்பளித்தது.

இதைத்தொடா்ந்து மல்லையா திவாலானவா் என்று அறிவிக்கப்பட்டால், அவரின் சொத்துகளை பிணையமாக வைத்துக்கொள்வதை கைவிடுவதாக தெரிவித்து, திவால் நோட்டீஸில் வங்கிகள் திருத்தம் மேற்கொண்டன.

இந்தத் திருத்தம் இந்திய சட்டத்துக்கு முரணாக உள்ளது என்று மல்லையா எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அந்தத் திருத்தம் இந்திய சட்டத்துக்கு முரணாக இல்லை என்று தீா்ப்பளித்த ஐசிசி, அவா் திவாலாகிவிட்டதாக அறிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மல்லையா அனுமதி கோரிய நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவித்து திவால் உத்தரவை லண்டன் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்ததாக வங்கிகள் சாா்பாக நீதிமன்றத்தில் ஆஜரான டிஎல்டி எல்எல்பி சட்ட நிறுவனம் தெரிவித்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க