செய்திகள் :

`தொழிலாளர்கள் வேலைக்காக இடம்பெயர கூட மறுக்கின்றனர்..!' - L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சொல்வதென்ன?

post image

எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, `கட்டுமானத் தொழிலுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை' என்று குறைபட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ``அரசின் நலத்திட்டங்களால் சொந்த ஊரில் அனைவரும் நன்றாக இருக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூருக்கு வேலைக்கு வர மறுக்கின்றனர். எனவே கட்டுமானத் தொழிலுக்கு தொழிலாளர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. தொழிலாளர்கள் வாய்ப்புகளை தேடிச் செல்ல விரும்புவதில்லை. அதற்கு காரணம் உள்ளூர் பொருளாதாரம் நன்றாக இருக்கலாம். இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுகிறது. கட்டுமானத்துறையில் விசித்திரமான தொழிலாளர்கள் இடம்பெயர்வு இருக்கிறது.

எங்களது நிறுவனத்திற்கு 4 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அடிக்கடி தொழிலாளர்கள் வேலையை விட்டுச் செல்வதால் 16 லட்சம் பேரை வேலைக்கு எடுக்கவேண்டியிருக்கிறது. பணவீக்கத்திற்கு தக்கபடி சம்பளத்தையும் மாற்றி அமைக்கவேண்டியிருக்கிறது. இந்தியாவை விட வளைகுடா நாடுகளில் 3.5 மடங்கு சம்பளம் அதிகமாக கிடைக்கிறது. கடந்த மாதம் எனது தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். வீட்டில் இருந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? எவ்வளவு நேரம் மனைவியை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள். அலுவலகத்திற்கு வந்து வேலையை செய்யுங்கள். நானும் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

சுப்ரமணியன்

தொழிலதிபர் ஆதார் பூனாவாலா, ஆனந்த் மகேந்திரா, ஐ.டி.சி சஞ்சய் புரி ஆகியோரும் தொழில் துறையின் உற்பத்திக்காக வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலையை பேணுவது அவசியம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இப்பிரச்னை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. வாரத்தில் வேலை நேரத்தை 70 அல்லது 90 மணி நேரமாக அதிகரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் வாரத்தில் 60 மணி நேரம் வேலை செய்வது பல்வேறு உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக பட்ஜெட்டிற்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒருவர் தினமும் 12 மணி நேரம் செலவு செய்யும்போது மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`இதுக்காக டுக்காட்டி காரை வித்துட்டேன்' - ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கிய கோவை ஸ்டார்ட் அப்!

கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது.இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் ... மேலும் பார்க்க

சத்யா நிறுவனம்: Samsung Galaxy S 25 Ultra மாடல்; தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விற்பனை

சத்யா நிறுவனம் அறிமுகம் செய்தது samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் தமிழ்நாடு முழுவதும் 300 கடைகளில் இன்று( பிப்ரவரி 6) முதல் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபை... மேலும் பார்க்க

Tata: ரத்தன் டாடா போல உடை; 'என் அப்பா வேலை பார்த்த இடத்தில் இன்று நான்...' - சாந்தனு உருக்கம்!

இந்தியாவின் முக்கிய நிறுவனமான `டாடா'-வை நிலையாக வழிநடத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக் 9ம் தேதி தனது 86வது வயதில் காலமானார்.தொழில்துறையில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் டாடா இந்தியர்களின் ... மேலும் பார்க்க

DRA Astra: மாதவரத்தில் 30க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு: DRA அறிமுகம்

சென்னைரியல்எஸ்டேட்துறையில்பெருமைமிகுநிறுவனமாகதிகழும்DRAசென்னைநகரமக்களின்வாழ்விடங்களைநவீனமுறையில்மாற்றிஅமைத்துவருகிறது.அந்தவகையில்தற்போதுஇந்நிறுவனம்மாதவரத்தின்பிரதானஇடத்தில்‘DRA Astra’என்னும்புதியஅடுக்... மேலும் பார்க்க

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது உங்கள் பழைய தங்க நகைக்கு புது லைஃப்

1964-ல் அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து, 'ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்' நகைத் துறையில் ஒரு முன்னணி பெயராக வளர்ந்துள்ளது, தற்போது அதன் 60 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.தங்கம், வைரம், பிளாட்டினம், வ... மேலும் பார்க்க

G Square: ரியல் எஸ்டேட் துறையுடன் வில்லா,அடுக்குமாடி கட்டுமான துறையில் நுழையும் ஜி ஸ்கோயர் நிறுவனம்

ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது.நகர்புறங்களில் விதிமுறைகளுக்கு ... மேலும் பார்க்க