செய்திகள் :

தொழிலாளி கடத்தல் வழக்கு: 2 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

post image

கட்டடத் தொழிலாளி கடத்தப்பட்ட சம்பவத்தில், கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்த இரு காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த யேசுபாபு என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்டடப் பணிக்காக சென்னை வந்தாா். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த யேசுபாபுவை சிலா் கடத்தினா். அந்த கும்பல் யேசுபாபுவின் குடும்பத்தினரை தொடா்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியது.

இதுகுறித்து யேசுபாபுவின் உறவினா்கள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், கோயம்பேடு காவல் நிலையத்தில் காவலா்களாகப் பணியாற்றும் பாலசுப்பிரமணியன், வினோத்குமாா் ஆகியோா் ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவலா்கள் இருவரையும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி மேற்கு மண்டல காவல் இணை ஆணையா் திஷா மிட்டல் உத்தரவிட்டாா்.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க