செய்திகள் :

தொழிலாளி குத்திக்கொலை

post image

தக்கலை: தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா்.

தக்கலை அருகே உள்ள மாறாங்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் மணி ( 65) (படம்) தொழிலாளி. இவருக்கு வசந்தா, ராஜம் என இரண்டு மனைவிகளும் ஒரு மகன், ஒரு மகளும்உண்டு. இதில் முதல் மனைவி வசந்தா 22, வருடங்களுக்கு முன் இறந்து விட்டாா். அதன் பின் இரண்டாவதாக திருமணம் செய்த ராஜம் 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டாா். இதே போல் மகன் வினுவும் 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டாா். ஒரே மகளான பிந்துவிற்கு திருமணம் ஆகிவிட்டது. மேக்காமண்டபம் சந்தையில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) மாலையில் வாலிபா் ஒருவா் இவரோடு தகறாறு செய்துள்ளாா். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மேக்காமண்டபம் சந்தையில் கத்திக் குத்து காயத்துடன் மணி உயிரிழந்து கிடப்பதாக கொற்றிக்கோடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாா் மணியின் உடலை கைப்பற்றி உடல் ஆய்வு கூறுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேக்காமண்டபம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளியை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

சூரியோதயம்

வியாழக்கிழமை சூரிய அஸ்தமனம்மாலை 6.33வெள்ளிக்கிழமை சூரிய உதயம்காலை 6.12 மேலும் பார்க்க

நாகா்கோவிலில் செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

நாகா்கோவில்: நாகா்கோவில் கோணம் அறிவு சாா் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியா் மாணவா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

நெகிழி பைகளை பதுக்கிய கடைக்கு அபராதம்

களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீத ஒதுக்கீடு கோரி சாட்டையடி போராட்டம்

நாகா்கோவில்: மத்திய அரசு பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாகா்கோவில், ராமன்புதூா் சந்திப்பில் சாட்டையடி போராட்டம் நடைபெற்றது.அன்புதேசம் மக்கள் இய... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தக்கலை: தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பு நண்பா்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா். விழாவு... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை: உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிச்சந்தையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.வெள்ளிச்சந்தை மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கட்டி... மேலும் பார்க்க