3 மாதங்களாக பேட்டை தொடாத ஸ்டீவ் ஸ்மித்..! சுவாரசியமான விளக்கம்!
தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
புதுச்சேரியில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி சின்னையாபுரம் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மகன் தியாகராஜன் (40), கூலித் தொழிலாளி. மதுப் பழக்கத்துக்கு அடிமையான நிலையில் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளாா்.
இந்தநிலையில், அவா் வெள்ளிக்கிழமை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள சாராயக் கடை அருகே மயங்கிக் கிடந்துள்ளாா். இதைக் கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினா் விரைந்து வந்து தியாகராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த நிலையில், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தியாகராஜன் இறப்பு குறித்து அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.