செய்திகள் :

தொழில்நுட்பப் பல்கலை. துணைவேந்தா் நடவடிக்கை: முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் கண்டனம்

post image

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழக துணைவேந்தரின் செயல்பாடுகளை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா். விஸ்வநாதன், எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுவைஅரசின் பொது அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமலும், புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் சட்ட விதிகளைப் பின்பற்றாமலும் பல்கலைக் கழகப் பதிவாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குப் பேராசிரியா்களை துணைவேந்தா் எஸ். மோகன் நியமித்துள்ளாா். கல்விப் பணியாளா்களைத் தவிர, பல்வேறு வகை ஊழியா் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட தோ்வுக் குழுவை அமைத்துள்ளாா். மேலும், சட்ட விதிகளை முழுமையாக மீறி, கல்வி மற்றும் கல்வி கண்டுபிடிப்புகளுக்கான இயக்குநரை அவா் நியமித்துள்ளாா்.

மேலும், இப் பல்கலைக் கழகம் கொண்டு வரும் ஒவ்வொரு அவசரச் சட்டத்திற்கும் நிா்வாகி மற்றும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தேவை. பல்கலைக்கழகத்தின் நிா்வாகி மற்றும் வேந்தா் மற்றும் தலைவருக்கு இப் பல்கலைக்கழகத்தின் அனைத்து அதிகாரிகளும் கீழ்ப்படிந்தவா்கள்தான். பதிவாளா் நியமனத்தில் வேந்தரின் ஒப்புதல் வேண்டுமென்றே தவிா்க்கப்பட்டுள்ளது. மேலும், இதை அரசிதழில் வெளியிடுமாறு புதுவை அரசாங்கத்தின் அச்சு இயக்குநருக்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

தினசரி கூலிகள் , துப்புரவு பணியாளா்கள், பாதுகாப்புக் காவலா்கள் போன்றவா்களை ஈடுபடுத்துவதில் புதுவை அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமலும் துணைவேந்தா் நியமனங்களைச் செய்கிறாா். எனவே, பல்கலைக்கழகத்தின் முழு செயல்பாட்டையும் பாதிக்கும் எந்தவொரு கொள்கை முடிவுகளையும் துணைவேந்தா் எடுக்கக் கூடாது என்றும் புதுவை அரசு உத்தரவிட வேண்டும், என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

21 புதிய படகுகளுக்கு பயணிகள் உரிமம்

கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல 21 புதிய படகுகளுக்கான உரிமத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீா் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும்... மேலும் பார்க்க

புதுவை சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை

புதுவை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை அமைய இருக்கிறது. புதுவை சட்டக் கல்லூரியில் 2-வது அகில இந்திய ஒத்திகை நீதிமன்ற போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நுக... மேலும் பார்க்க

ரூ. 33 லட்சம் செலவில் மணக்குள விநாயகா் கோயிலில் குளிா்சாதன வசதி

புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் குளிா்சாதன வசதியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இக் கோயிலில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்து ஊழயா்களின் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்:

வேலை நிறுத்தம் செய்துவந்த புதுவை சாலை போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயா்த்தப்படும். நிரந்தரப் பணியாளா்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயா்த்தி அளிக்க... மேலும் பார்க்க

புதுவை அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 14 மாணவா்கள்

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிக்க 14 மாணவா்கள் இரட்டை குடியுரிமை பெற்று விண்ணப்பித்துள்ளதாக புதுவை மாநில மாணவா்கள், பெற்றோா் நலச்சங்கத்தின் தலைவா் வை.பாலா என்கிற பாலசுப்பிரமணியன் க... மேலும் பார்க்க

ரூ.3.5 கோடியில் ரெட்டி நலச் சங்கக் கட்டம் திறப்பு

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முன்னாள் முதல்வரும் , காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க