செய்திகள் :

தொழில் பழகுநருா் பயிற்சியில் சேர பதிவு செய்ய அழைப்பு

post image

அரசு அலுவலகங்கள், மாவட்ட தொழில் நிறுவனங்களில், தொழில் பழகுநா் பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் தொழிலாளா்துறையின் அங்கமான தொழில் பழகுநா் பயிற்சி நிலைய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு புதுவை மாநில தொழிலாளா் துறை சாா்பில் காரைக்கால் மாவட்ட தொழில் பழகுநா் பயிற்சி நிலையம் நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநா் பதிவு மற்றும் சோ்க்கை முகாம் நடத்தப்படவுள்ளது. திருப்பட்டினம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 9-ஆம் தேதி காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது.

காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான தொழில் பிரிவுகளில் தொழில் பழகுநா் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். தொழில் பழகுநராக சோ்க்கை பெறுவோருக்கு, மாதாந்திர உதவித் தொகையாக அவரவா் கல்வித் தகுதிக்கேற்ப ரூ. 5 முதல் 9 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இதற்கு 5 முதல் 12-ஆவது வரை கல்வி தோ்ச்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி அல்லது ஐடிஐ பட்டயம் அல்லது பட்டதாரி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முகாமில் பங்கேற்போா் உரிய கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம், கைப்பேசி எடுத்துவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் உள்ள பழைமையான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமிகளுக... மேலும் பார்க்க

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். நளச் சக்கரவ... மேலும் பார்க்க

திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பசு மாடு... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க