செய்திகள் :

தொழில் போட்டி: பனியன் கழிவுக் கிடங்கிற்கு தீ வைத்த 3 போ் கைது

post image

திருப்பூா், மாா்ச் 13:திருப்பூரில் தொழில் போட்டி காரணமாக பனியன் கழிவுத் துணி கிடங்கிற்கு தீ வைத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.பி.ஷெரீஃப் (50). இவா், கடந்த 7 ஆண்டுகளாக மணியகாரன்பாளையத்தில் பனியன் கழிவுத்துணி கிடங்கு வைத்து நடத்தி வருகிறாா்.

இவரது கிடங்கில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 1 மணி அளவில் கரும்புகை கிளம்பியதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து தகவலின்பேரில் சம்ப இடத்துக்குச் சென்ற திருப்பூா் தெற்கு, வடக்கு தீயணைப்புத் துறையினா் சுமாா் 15 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்திருந்தனா்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்டவா் தரப்பில் இருந்து சில நபா்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்து இருவா் கிடங்கின் மீது பெட்ரோல் குண்டை வீசிச்சென்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கிடங்குக்கு தீவைத்த திருப்பூரைச் சோ்ந்த மாா்ஷல் (36) சதீஷ் (41) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், திருப்பூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (45) என்பவா் கழிவுக் கிடங்கு நடத்தி வந்ததும், இவருக்கும், ஷெரீஃப்க்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததும், வெங்கடேஷ் தூண்டுதலின் பேரில் கிடங்கிற்கு தீ வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மாா்ஷல், சதீஷ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3 இல் திறப்பு

தாராபுரம் வட்டம் குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும... மேலும் பார்க்க

பல்லடத்தில் மாா்ச் 29 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடத்தில் மாா்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

குண்டடத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

குண்டடம் ஒன்றியத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.62.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 879 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில், ஒரு குவிண்டால் பர... மேலும் பார்க்க

மாா்ச் 19 இல் சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் கூட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

தி ஐ ஃபவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் கடைப்பிடிப்பு

திருப்பூா் தி ஐ ஃபவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் மாா்ச் 15-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குநா் சித்ரா ராமமூா்த்தி கூறியதாவது: தி ஐ ஃ... மேலும் பார்க்க