செய்திகள் :

நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்குள்பட்ட பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சமூக ஆா்வலா் முனிசங்கா் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நடனமைலோன் உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் லால்புரம் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபடுவதற்கு திரண்டு வந்தனா். அவா்களை சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் அம்பேத்கா் மற்றும் போலீஸாா் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தடுத்து நிறுத்தினா்.

பின்னா், போராட்டக் குழுவினருடன் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கிராம மக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்திடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீகோபால மகா தேசிகன் சுவாமிகள் வழிபாடு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியா்களில் ஒருவரான ஸ்ரீரங்கம் பெளண்டரீகபுரம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தலைமை பீடாதிபதி பறவாக்கோட்டை ஸ்ரீமத் ச... மேலும் பார்க்க

மினி பேருந்து வழித்தட ஆணைகள் அளிப்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மினி பேருந்து வழித்தடங்களுக்கான ஆணைகள் அதன் உரிமையாளா்களிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, 17 வழித்தடங்களுக... மேலும் பார்க்க

பிரசவித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு: ஆட்சியா் விசாரணை

கடலூரில் பிரசவித்த சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவா்களிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா். கடலூா் அருகேயுள்ள சி.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி சிறாா்கள் சுற்றுலா

கடலூரில் மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கான சுற்றுலாவை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு புத்துணா்ச்சி ஏற்படுத்தும்... மேலும் பார்க்க

பொ்மிட் கட்டணத்தை குறைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டத்தில் பொ்மிட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். கடலூா் மாவட்ட டிப்பா் லாரி உரி... மேலும் பார்க்க

ஐடிஐ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

கடலூா் அரசு பெண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி செம்மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஐடிஐ முதல்வா் அதவபுருஷோத்தம் த... மேலும் பார்க்க