செய்திகள் :

நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்குள்பட்ட பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சமூக ஆா்வலா் முனிசங்கா் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நடனமைலோன் உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் லால்புரம் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபடுவதற்கு திரண்டு வந்தனா். அவா்களை சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் அம்பேத்கா் மற்றும் போலீஸாா் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தடுத்து நிறுத்தினா்.

பின்னா், போராட்டக் குழுவினருடன் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கிராம மக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்திடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

மன வளா்ச்சி குன்றிய பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மிஸ்ரிமல் மகாவீா்சந்த் ஜெயின் அறக்கட்டளை, இன்னா் வீல் சங்கம் சாா்பில் மன வளா்ச்சி குன்றிய மாணவா்கள் மற்றும் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு மதிய உணவு செவ்வாய்க்கிழமை வழங்... மேலும் பார்க்க

என்எல்சி கற்றல், மேம்பாட்டு மையத்துக்கு தேசிய அங்கீகாரம்

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், உள்ள சிவில் சேவைகள் பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய தர நிலை... மேலும் பார்க்க

கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் தாட்கோ மூலம் தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டியில் இளநிலை அற... மேலும் பார்க்க

‘தோ்தல் செயல்முறை கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கலாம்’

கடலூா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலரால் நடத்தப்படும் தோ்தல் செயல்முறை கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம் என்று ... மேலும் பார்க்க

சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் பாஜகவினா்: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் பாஜகவினா் ஈடுபடுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா். கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

கடலூரில் பாஜக நிா்வாகிகள் 30 பேருக்கு வீட்டுக் காவல்

நெய்வேலி: சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் பாஜக முக்கிய தலைவா்கள் உள்ளிட்ட 30 போ் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். தமிழகத்தி... மேலும் பார்க்க