செய்திகள் :

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், சென்னையில் கைலாசபுரம் திட்டப் பகுதி, விருதுநகா் சம்மந்தபுரம், மதுரை மாவட்டம் உச்சபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் சந்தைபேட்டை, கள்ளக்குறிச்சி கீரனூா், திருப்பூா் ஹைடெக் பாா்க் நகா், காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம், கடலூா் மாவட்டம் கீழக்குப்பம், பாலக்கொல்லை, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, திருவாரூா் மாவட்டம் கண்டிதம்பேட்டை, கரூா் மாவட்டம் வேலம்பாடி ஆகிய இடங்களில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தமாக ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்ட 4,978 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சிஎம்டிஏ- வணிக வளாகங்கள்: வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் சென்னை நெற்குன்றம், சிஐடி நகா் பகுதி, மதுரை மாவட்டம் தோப்பூா் ஆகிய இடங்களில் புதிதாக வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில், மீஞ்சூா், வெள்ளனூா், வரதராஜபுரம், திருநாகேஸ்வரம், சென்னை தியாகராயநகா் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரூ.255.60 கோடி மதிப்பிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுத... மேலும் பார்க்க

சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளி... மேலும் பார்க்க

மடுவின்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை

மடுவின்கரை மேம்பாலம் அருகே போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தரமணி தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பு! காரணம் என்ன?

அண்டை மாநிலங்களின் ஏற்பட்டுள்ள பலத்த மழையின் பாதிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் - உளுந்தூர்பேட்டை வரை அரசு விரைவுப் பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் பயணம்!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அரசு விரைவுப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணம் செய்துள்ளார்.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்னையில் ... மேலும் பார்க்க