செய்திகள் :

நகைக்கடன் விதிகள்: இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்: முதல்வர்

post image

நகைக்கடன் விதிகள் போன்ற மக்கள் சார்ந்த விஷயங்களை இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

வங்கியில் அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன், நகைக்கான ஆதாரம், நகைக்கான தரம், தூய்மை குறித்த சான்றுகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் அதில் இடம்பெற்றிருந்தன. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

ரூ. 2 லட்சத்துக்கும் குறைவான நகைக் கடன் பெறுபவர்களுக்கு புதிய விதிகளில் இருந்து தளர்வு அளிக்க வேண்டும், புதிய விதிமுறைகளை அமல்படுத்த சிறிது கால அவகாசம் வழங்கி ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

தங்க நகைக் கடன் விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தங்க நகைக் கடன்களுக்கான புதிய விதிமுறைகள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி.

விவசாயிகள், தினசரி வேலை செய்து வருமானம் ஈட்டுபவர்கள் என ரூ. 2 லட்சத்திற்கும் கீழ் கடன் பெறுபவர்களின் நலன்களைப் சரியான நேரத்தில் பாதுகாப்பதும் கடன் கிடைப்பதை உறுதி செய்வதும் எங்களின் நிலையான கோரிக்கையாக இருந்து வருகிறது.

தற்போது விதிகளை தளர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தாலும், இதுபோன்ற அறிவிப்புகள் ஏழை மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இனி இதுபோன்ற விதிகள், கொள்கைகளை மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

ஞானசேகரனுக்கு சிறையில் சலுகைகள் கூடாது! எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?

சென்னை: 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அவருக்கு சிறையில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி தீ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்காக திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத... மேலும் பார்க்க

வேலூரில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

வேலூர் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் இன்று தீா்ப... மேலும் பார்க்க

மாணவர் சேர்க்கையில் அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளிகள்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நல்ல முறையில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.2025 - 26ஆ... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.240 உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,950-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ... மேலும் பார்க்க