செய்திகள் :

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் லண்டனிலேயே தரையிறங்கிய விமானம்

post image

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னை வந்து கொண்டிருந்தது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

உடனே இதுகுறித்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின்னர் அந்த விமானம் மீண்டும் லண்டனிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நான்கு நாள்களுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை!

இருப்பினும், விமானம் புறப்படும் நேரம், லண்டனுக்குத் திரும்புவதற்கு முன்பு விமானம் எவ்வளவு நேரம் வானில் இருந்தது போன்ற பிற விவரங்களை விமான நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.

இதன் காரணமாக லண்டன் - சென்னை, சென்னை - லண்டன் செல்லவிருந்த 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்!

சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று (ஜூன் 16) தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர் உடை அணிந்தவாறு, அலு... மேலும் பார்க்க

இரவில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதல்வர்!

தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சியைச் சேர்ந்த மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவைப் பரிசாக அளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக விமானம் மூலம் நே... மேலும் பார்க்க

கடத்தல் வழக்கு: தமிழக ஏடிஜிபி ஜெயராம் கைது!

சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏடிஜிபி ஜெயராமை காவல்துறையினர் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னையை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் ... மேலும் பார்க்க

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர... மேலும் பார்க்க