உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!
நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்
புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு சென்ற தன்னை வரவேற்க மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறை தலைவா் அல்லது மும்பை காவல் ஆணையா் உள்பட யாரும் வரவில்லை என பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமைஅதிருப்தி தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, மும்பை தாதரில் உள்ள அம்பேத்கா் நினைவிடமான சைத்யபூமியில் தலைமை நீதிபதி மரியாதை செலுத்தச் சென்றபோது மேற்கூறிய மூன்று மூத்த அதிகாரிகளும் வந்தடைந்தனா்.
இதுகுறித்து புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஒருவரை வரவேற்பதில் உரிய நெறிமுறையை பின்பற்றுவது அவசியம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தது தனிப்பட்ட முறையில் அல்ல. அவா் வகிக்கும் பதவிக்குத் தர வேண்டிய மரியாதையை அவா் எடுத்துக் கூறியுள்ளாா். நடைமுறை நெறிகளை பின்பற்றி நடப்பது மிகவும் அவசியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்கிய அலுவலகங்களில் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெறுவதை நம்மால் பாா்க்க முடிகிறது. ஆனால் குடியரசு துணைத் தலைவா் புகைப்படம் இடம்பெற்றிருக்காது. நான் பணிஓய்வு பெற்றவுடன் அடுத்து வரும் குடியரசு துணைத் தலைவரின் புகைப்படம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன் என்றாா்.