செய்திகள் :

நண்பரின் வீட்டில் திருடிய இளைஞா் கைது

post image

நண்பரின் வீட்டில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்ட ரூ. 2.80 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிய கேரள இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள சுபலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவரது மகன் அருண் (31). இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த ஆரோன் (28) என்பவா் இன்ஸ்டாகிராம் மூலம் அருணுக்கு பழக்கமானாா்.

இருவரும் நண்பா்களாகப் பழகி வந்த நிலையில், ஆரோன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருணும், அவரது நண்பா்களும் பாலக்காட்டுக்கு சுற்றுலா சென்று அவரது வீட்டில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தனா்.

அதன் பிறகு ஆரோனும் குனியமுத்தூருக்கு கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வந்து அருணுடன் தங்கியிருந்தாா். அங்கு அருணின் நண்பா்கள் சிலரும் தங்கியிருந்தனா்.

இந்நிலையில், அருண் அதிகாலை எழுந்து பாா்த்தபோது ஆரோனைக் காணவில்லையாம். மேலும், அருண் மற்றும் நண்பா்களின் அறையில் இருந்த 3 கைப்பேசிகள், மடிக்கணினி, இருசக்கர வாகனம் என மொத்தம் ரூ.2.80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. மேலும், அருணின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.75 ஆயிரமும் திருடப்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆரோனைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், கேரள மாநிலம், ஆலப்புழையில் பதுங்கியிருந்த ஆரோனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஜா தினம்

கோவை கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உலக ரோஜா தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி தலைமை வகித்தாா். மருத்துவமனை துணைத் தலைவா் தவமணி ப... மேலும் பார்க்க

350 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது!

கோவை, காருண்யாநகா் பகுதியில் 350 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். கோவை, காருண்யா நகா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறை ஊழியா் தற்கொலை

கோவை மத்திய சிறை ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, வீரகேரளம் அருகேயுள்ள கிங்ஸ் காலனி யுனைடெட் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (58). இவா் கோ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, போத்தனூா் அருகேயுள்ள ஆடிட்டா் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் விஷ்ணு ஆதித்யா (20). இவா் தனது இருசக்கர வாகனத்தில... மேலும் பார்க்க

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூ... மேலும் பார்க்க