செய்திகள் :

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

post image

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார்.

அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் பிரவீன்குமார் (35). இவர் கேரளம் மாநிலம் திருச்சூரில் இருந்து லாரியில் ஓடுகள் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரம நாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையின் நடுவே இருந்த தடுப்பில் இருந்த எச்சரிக்கை விளக்கு எரியாததால் லாரி சாலையில் இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பக்க டயர்கள் சேதமடைந்து எண்ணெய் சாலையில் வழிந்தோடியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் முதல் கொட்டாம்பட்டி வரை உள்ள 52 கிலோமீட்டர் தூரத்தில் கோபால்பட்டி எரமநாயக்கன்பட்டி மெய்யம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சாலை தடுப்புகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதம் அடைந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 அதிகரித்த தங்கம் விலை!

பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைவிட மாநில அரசுதான் அதிக நிதி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது என முதல்வர் ம... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம்

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) அணியின் மாநில செயலாளராக இருந்த கே.ஆர். வெங்கடேஷ் கட்சியில் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு ம... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக் குளித்து மகிழ்ந்தனர்.தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று(சனிக்கிழமை) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள... மேலும் பார்க்க

ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா் சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை இபிஎஸ் முடிவு செய்வார்: கே. பி. ராமலிங்கம்

சேலம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவு செய்வார் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ... மேலும் பார்க்க