செய்திகள் :

"நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்..." - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

post image

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

"ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கியம் அல்ல, அவை ஏன் வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம்" என சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் (chief of defence staff of the Indian Armed Forces) அனில் சவுகான் ப்ளூம்பெர்க் தளத்துடனான நேர்காணலில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் சொல்வதில் உண்மையில்லை!

பாகிஸ்தான் இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறுவது முற்றிலும் தவறு எனக் கூறிய அவர், குறிப்பிட்டு எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பதைக் கூற மறுத்துள்ளார்.

"நல்ல விஷயம் என்னவென்றால் நாம் திட்டமிடலில் என்ன தவறு செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டோம். அதை சரி செய்து அடுத்த இரண்டு நாட்களில் நமது அனைத்து ஜெட்களும் வானில் பறந்தன, தூரத்து இலக்குகளை வெற்றிகரமானத் தாக்கியிருக்கின்றன" எனப் பேசியுள்ளார் ஜெனரல் அனில் சவுகான்.

indian air force

மே7ம் தேதி மோதல் தொடங்கியதில் இருந்து, இந்திய போர் விமானங்கள் பற்றி ஒரு அரசு அல்லது ராணுவ அதிகாரி வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணு ஆயுத போரை நெருங்கவில்லை!

இந்திய ராணுவம் மோதலில் போர் விமானங்களை இழந்ததா என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்துவந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், 6 விமானங்களை தங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் தெரிவித்திருந்தார். எனினும் அந்த தகவலில் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை.

மேலும் சவுகான், சீனா பாகிஸ்தானுக்கு வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து தங்களால் துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். நடைபெற்ற சண்டையானது அணு ஆயுத போராக மாறுவதற்கான கட்டத்தை நெருங்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

‘மதுரை குலுங்க குலுங்க...’ சலசலப்பும் சந்தோஷமும்! - திமுக பொதுக்குழு சுவாரசிய சம்பவங்கள்

மதுரையில் நடந்த தி.மு.க பொதுக்குழுவில், “அடுத்த ஆண்டு இதே நேரத்தில், ஏழாவது முறையாக தி.மு.க ஆட்சி அமைத்து, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றோம் என்பது தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும்” என்கிற கனவை முன்... மேலும் பார்க்க

INDIA : `முக்கிய கூட்டம்; ஆனாலும் முக்கிய கட்சிகள் மிஸ்ஸிங்’ - வலுவிழக்கிறதா இந்தியா கூட்டணி?

பஹல்கம் தீவிரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானுக்கு எதிரான போர் நிறுத்தம், போர் நிறுத்தத்துக்கு தான்தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருவது என கடந்த சில மாதங்களாக பல்வேறு... மேலும் பார்க்க

``ஞானசேகரன், ஃப்ளைட் மோடுக்கு பின்... அதில்தான் அந்த சார் ஒழிந்து இருக்கிறார்!” - அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில்,மாணவி அளித்த புகாரின்படி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகள... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாஜகவுடன் கூட்டணி தொடருமா ?' - செய்தியாளர்கள் கேள்விக்கு ரங்கசாமி ரியாக்‌ஷன்!

புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி இன்று மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``கொரோனா பாதிப்பு குற... மேலும் பார்க்க

கோவை: ஷோரூமில் நின்ற சொகுசு காரை கண் இமைக்கும் நேரத்தில் திருடிய நபர்; சிக்கியது எப்படி?

கோவை, சிங்காநல்லூர் திருச்சி சாலையில் டாடா நிறுவனத்தின் கார் விற்பனை மையம் உள்ளது. அங்குப் பணியாற்றி வரும் சரவணக்குமார் என்ற ஊழியர், கார்களை ஆய்வு செய்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதி... மேலும் பார்க்க

TVK : '120 நாள் பிளான்; சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் விஜய்?' - திட்டம் என்ன?

'2026 இல் இந்த திமுக அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.' என தவெக சார்பில் சி.டி.ஆர், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் என மாறி மாறி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.TVK Vijayகோயம்புத்தூரில் பூத்... மேலும் பார்க்க