செய்திகள் :

"நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அண்ணாமலை இன்னும்..." - திருமாவளவன்

post image

ஈரோட்டில் நான்கு நாள்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறது.

இவ்வாறிருக்க, இச்சம்பவத்தின் குற்றவாளிகளை இரண்டு வாரங்களில் போலீஸார் கைதுசெய்யவில்லை என்றால் மே 20-ம் தேதி தன்னுடைய தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் - பாஜக
அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் - பாஜக

இந்த நிலையில், சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவனிடம், அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது குறித்து பத்திரிகையாளர் தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த திருமாவளவன், "பழைய தலைவர் என்பதை மறந்துவிட்டு, இன்னும் தலைவராக இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர் பேசிக்கொண்டிருக்கிறார். தன்னைத் தலைவராக எண்ணிக் கொண்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனா, அண்ணாமலையா என்பதை அவர்கள் முடிவுசெய்ய வேண்டும்" என்று கூறினார்.

மேலும், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவாகியிருப்பதால் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்ற மாயையை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு ஏதுவான சாத்தியக்கூறுகள் இல்லை. அவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் இருக்கிறதே தவிர, பலன் கூடுவதற்கு வாய்ப்பில்லை" என்றார்.

'ஸ்டாலின் மாடல் ஆட்சி; சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி'- எடப்பாடி விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' என்று ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவ... மேலும் பார்க்க

`சண்டையிடுவதில் எந்த பலனும் இல்லை..!’ - மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விரும்பும் இளவரசர் ஹாரி

பிரிட்டன் இளவரசர் ஹாரி பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தனது மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விருப்பம் தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்க்க... மேலும் பார்க்க

'ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்; அடிமைக் கட்சியல்ல திமுக!' - முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், "நம் உயிருடன் கலந்திருக்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் இருக்கிறோமா... வேறு எங்காவது இருக்கிறோமா?' - நயினார் நாகேந்திரன் காட்டம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை பாஜக அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது... மேலும் பார்க்க

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: அவிழாத முடிச்சுகள்; ஓராண்டாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்... மேலும் பார்க்க

India - Pakistan: அமெரிக்கா, சீனா, மலேசியா... போர் ஏற்பட்டால் உலக நாடுகள் யார் பக்கம்? | Explained

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த விரிசல் போராக உருவெடுக்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரண்டு நாடுகளும் ... மேலும் பார்க்க