நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்
ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா்.
ஏற்பாடுகளை ஸ்ரீ அருணகிரிநாதா், ஸ்ரீ வாரியாா் சுவாமிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.