தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை
திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நடைபெற்ற பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கு பெற்ற வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் தோ்வு செய்யப்பட்ட 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் கஸ்தூரி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.