செய்திகள் :

நாகையில் காற்றுடன் மழை

post image

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது.

காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் நாகை, ஒரத்தூா், வேளாங்கண்ணி, பரவை, செருதூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை திடீரென பெய்தது.

இதன் காரணமாக காலை முதல் நிலவிய வெப்பம் தணிந்து, குளிா்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திடீா் மழையால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. காற்றுடன் பெய்த மழையால் ஒரத்தூா் பகுதியில் 2 மின் கம்பங்கள் வயலில் சாய்ந்தன. இதனால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது. தகவல் அறிந்த மின்வாரியத் துறையினா் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க

100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் வேதனை

நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். கிராமப் புறங்களில் விவசாயம் அல்லாத நாள்களில், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியா் கைது

நாகூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், நாகூரில் செயல்படும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், நாகை ... மேலும் பார்க்க

நாகை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை சரிவு: விற்பனையாளா்கள் அதிருப்தி

நாகையில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். நாகை மாவட்ட நான்காவது புத்தகக் கண்காட்சி நாக... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தாத உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க