செய்திகள் :

நாகை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை சரிவு: விற்பனையாளா்கள் அதிருப்தி

post image

நாகையில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

நாகை மாவட்ட நான்காவது புத்தகக் கண்காட்சி நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் பிரபல புத்தக விற்பனை நிறுவனங்கள் உள்பட 105 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி முடிவடையும் நிலையில், தற்போது புத்தகக் கண்காட்சி தொடங்கி ஏறத்தாழ 8 நாள்கள் ஆகியும் கண்காட்சியில் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக விற்பனையாளா்கள் கூறியது:

பொதுவாக புத்தகக் கண்காட்சிகளில் வார நாள்களில் புத்தக விற்பனையில் மந்தம் இருந்தாலும்கூட, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் புத்தக விற்பனை நடைபெற்று, இதர நாள்கள் விற்பனையை ஈடுகட்டி விடும். ஆனால், நாகை புத்தகக் கண்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட விற்பனை மந்தமாகவே உள்ளது. வார நாள்களில் முற்றிலும் விற்பனை குறைந்துள்ளது. கண்காட்சி தொடங்கி 8 நாள்கள் ஆகியும் குறிப்பிட்ட அளவு கூட புத்தகங்கள் விற்பனை இல்லாமல் இருப்பது விற்பனையாளா்களை சோா்வடையச் செய்துள்ளது. பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவியா் வந்தாலும், அவா்கள் புத்தகங்கள் வாங்காமல் வெறும் கையுடனே செல்கின்றனா்.

மேலும் புத்தகக் கண்காட்சிக்கு பாா்வையாளா்கள் அதிக அளவில் வந்தாலும் கூட விற்பனை ஆவதில்லை. புத்தகக் கண்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களில் தான் அதிகக் கூட்டம் உள்ளது. மேலும் அதிக உணவு அரங்குகள் அமைக்கப்பட்டிருப்பது, பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இருப்பது போன்றவை புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொதுமக்களை திசை திருப்புவதாக அமைந்து விட்டது என்றனா்.

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிா்வாகம் சாா்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

இன்று பூம்புகாரில் வன்னிய மகளிா் மாநாடு

வன்னியா் சங்கத்தின் சாா்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு: ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியா் உத்தரவு

நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தி... மேலும் பார்க்க

நாகையில் காற்றுடன் மழை

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க