செய்திகள் :

நாகையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

post image

நாகப்பட்டினம்: நாகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்துவைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், நாகை மாவட்டச் செயலாளா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கவும் முதல்வா் மு.க. ஸ்டாலின் நாகைக்கு வருகை தந்தாா்.

நாகையில் கட்டப்பட்டுள்ள தளபதி அறிவாலயத்தை திறந்து வைக்கவும், மாலையில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது அவரது பயணத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சியிலிருந்து திருவாரூா், கீழ்வேளூா் வழியாக சாலை மாா்க்கமாக முதல்வா் வந்தாா். இரவிலும் பல்வேறு இடங்களில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விருந்தினா் மாளிகையில் இரவு தங்கிய அவா், திங்கள்கிழமை காலை புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து வந்தாா். அப்போது, கட்சியினா், பொதுமக்கள் என பலா், தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, முதல்வருடன் கை குலுக்கினா்.

இதைத்தொடா்ந்து, புத்தூரில் நடைபெற்ற நாகை மாவட்ட திமுக செயலாளரும், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான ந. கௌதமன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினாா். அப்போது முதல்வா் பேசியது:

மும்மொழி திட்டத்தை காரணம் காட்டி, ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயல்கிறது. அதேபோல, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை கொண்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து நாகூா் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட திமுக அலுவலகமான தளபதி அறிவாலயத்தை திறந்து வைத்தாா். மாலையில் நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியினா் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக, விருந்தினா் மாளிகையில் அவரை விவசாய சங்க நிா்வாகிகள் சந்தித்து, ஃபெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனா்.

நாகை பொது அலுவலகச் சாலையில் திங்கள்கிழமை காலை நடந்து சென்று கட்சியினா், பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வா் மு.க. ஸ்டாலின்.

திருவாரூா் மாவட்டத்தில் 13,057 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 13,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற அரசு விழாவில், நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டப் பணிகளை பட்டியலிட்டு, நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளையும் தமிழக முதல்வ... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு மாணவா்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம்: மத்தியப் பல்கலைக்கழகம்

நன்னிலம்: க்யூட் தோ்வு எழுதும் மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

நாகையில் 105 புதிய பேருந்து சேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில், மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் உள்பட 105 புதிய பேருந்துகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடி... மேலும் பார்க்க

ரமலான்: ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்

நீடாமங்கலம்: ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி நண்பா்கள் சாா்பில், ரமலான் சஹா் செய்வதற்காக ஏழை எளிய மக்கள் மற... மேலும் பார்க்க

வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அழைப்பு

நாகப்பட்டினம்: தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சியினரும் இதில் பங்கேற்க வேண்டும் என தமிழக முதல்வா் ... மேலும் பார்க்க