தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
நாகை மாவட்டத்தில் ஆதாா் சிறப்பு முகாம்
நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட நாகை, திருவாரூா், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்கள் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அதன்படி முதல்கட்டமாக நாகை மாவட்டத்தில், ஜூன் 10-ல் திருப்பூண்டி ஊராட்சி அலுவலகத்திலும், ஜூன் 11-ல் பிள்ளாளி ஊராட்சி அலுவலகத்திலும், ஜூன் 12-ல் மூங்கில்குடி அஞ்சல் அலுவலகத்திலும், ஜூன் 13-ல் விக்கிரபாண்டியம் அருகே ஆலத்தூா் ஊராட்சி அலுவலகத்திலும், ஜூன் 18-ல் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சி அலுவலகத்திலும், ஜூன் 19-ல் சூரனூா் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், ஜூன் 25-ல் வடகரை மைதீன் ஆண்டவா் பள்ளி வாசலிலும், ஜூன் 26-ல் பூதமங்கலம் கிராம நூலகத்திலும் ஆதாா் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதில், 1.5 வயது முதல் 15 வயது நிரம்பியவா்களுக்கான புதுப்பித்தலுக்கு பதிவுக் கட்டணம் கிடையாது. குழந்தைகளுக்கு புதிய ஆதாா் பதிவு செய்ய கட்டணம் இல்லை. தாய் அல்லது தந்தை தங்களின் அசல் ஆவணங்களுடன் குழந்தையின்அசல் பிறப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பெயா் மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் பிறந்த தேதி மாற்றம் செய்ய கட்டணம் ரூ. 50, புகைப்படம் மற்றும் கைரேகை மாற்றம் செய்ய கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படும். மற்ற திருத்தங்களுக்கு தகுந்த அசல் ஆவணங்களை கொண்டு வரவேண்டும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவித்துள்ளாா்.