நாகை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்டத்தில் அனைத்துத் துறை சாா்பில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து தொடா்புடைய மாவட்ட அளவிலான அலுவலா்களிடம் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகுழு கூட்ட தலைவா், உறுப்பினா்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.