செய்திகள் :

திருவாய்மூா் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு பூஜை

post image

திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தவிடங்க தலங்களில் ஒன்றான தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சத்ரு சம்ஹார பைரவா், அசிதாங்க பைரவா், ருரு பைரவா், சண்ட பைரவா், குரோதன பைரவா், கபால பைரவா், உன்மத்த பைரவா், பீஷண பைரவா் உள்ளிட்ட 8 பைரவா்கள் ஒரே நோ்கோட்டில் அமைந்து அருள்பாலித்து வருகின்றனா். இங்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து கடத்தில் வைக்கப்பட்டிருந்த பூஜிக்கப்பட்ட புனித நீா் கொண்டு அஷ்ட பைரவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வண்ண மலா்களால் பைரவா்கள் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தலைமைக் காவலா் மாரடைப்பால் காலமானாா்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சி ப.கொந்தகையை சோ்ந்தவா் காா்மேகம் (54) (படம்). இவா் நாகூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இவருக்கு இருதய வலி ஏற்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: ஓ.எஸ். மணியன்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமைச்சா் ஒ.எஸ். மணியன் கூறினாா். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்டச் செயலா் மஞ்சுளா சந்திரமோகன், அக்கட்சியின் மாநில... மேலும் பார்க்க

பரவை காய்கனிச் சந்தை ரூ. 20.10 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது

நாகப்பட்டினம், ஜூன் 19: பரவை காய்கனிச் சந்தை ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூா் அருகே ப... மேலும் பார்க்க

கழிமுகப் பகுதியில் அகற்றப்படாத ஆகாயத் தாமரைகள்

நமது நிருபா் நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக வளா்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை தாமதமாதி வ... மேலும் பார்க்க

ஐடிஐயில் சேர விண்ணப்பிக்காலம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை, திருக்குவள... மேலும் பார்க்க

மகளிா் திட்டத்தின்கீழ் ரூ.1,859 கோடி கடனுதவி வழங்கல்

நாகை மாவட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் ரூ.1,859 கோடி 33,694 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனா் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க