ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை
கழிமுகப் பகுதியில் அகற்றப்படாத ஆகாயத் தாமரைகள்
நமது நிருபா்
நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக வளா்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை தாமதமாதி வருவதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
வேதாரண்யம் வழியாகச் சென்று கடலில் கலக்கும் வளவனாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, மல்லியனாறு, நல்லாறு, சக்கிலியன் வாய்க்கால், மணக்காட்டான் வாய்க்கால் ஆகியன பிரதான வடிகால் ஆறுகளாகும். இந்த ஆறுகளின் பாசனம் மற்றும் வடிகால் பகுதிகளில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் விவசாயிகளுக்கும், சூழல் பாதுகாப்புக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு- தென்னடாா் வழியாக கடலில் இணையும் முள்ளியாற்றில் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு கீழே (வடிகால் பகுதி) வாய்மேடு கழிமுகம் வரையில் சுமாா் 17 கி. மீ. தொலைவுக்கும், மானங்கொண்டான் ஆற்றில் தகட்டூா் - ஆதனூா் இடையே 15 கி.மீ. தொலைவுக்கும் ஆகாயத் தாமரைகளின் ஆக்கிரமிப்புதான்.
கடந்த காலங்களில் இவற்றை அகற்ற போதிய நிதி ஒதுக்கீடோ, 100 நாள் வேலைத் திட்டம் மூலம் மேற்கொள்ள போராட்டங்கள் நடத்தப்பட்ட போதும் அனுமதியோ கிடைக்கவில்லை.
மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் ஒரு நிறுவன நன்கொடை மூலம் அவசர அவசரமாகப் பணிகள் பெயரளவில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
வேதாரண்யத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் க. பழனித்துரை, தெளிந்த நீரோடைகளுக்கு சிறப்புப் பெற்ற இப்பகுதியில் தண்ணீா் மோசமான அளவில் மாசடைந்து வருவது வேதனையளிப்பதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து கடந்த மே 31-இல் தலைஞாயிறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நீா் வளத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ஜெகநாதன், காவிரி படுகையில் தூா்வாரும் பணிக்கு மட்டுமே ரூ. 98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு கவனத்திற்கு வந்துள்ளதால், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.
மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், வடகிழக்குப் பருவமழை நெருங்கும் வேளையிலும் ஆகாயத்தாமரைகளை அகற்ற தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த சூழல் கேட்டினை நீா்வளத்துறையினா், சுகாதாரத்துறையினா் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.
