செய்திகள் :

கழிமுகப் பகுதியில் அகற்றப்படாத ஆகாயத் தாமரைகள்

post image

நமது நிருபா்

நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக வளா்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை தாமதமாதி வருவதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

வேதாரண்யம் வழியாகச் சென்று கடலில் கலக்கும் வளவனாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, மல்லியனாறு, நல்லாறு, சக்கிலியன் வாய்க்கால், மணக்காட்டான் வாய்க்கால் ஆகியன பிரதான வடிகால் ஆறுகளாகும். இந்த ஆறுகளின் பாசனம் மற்றும் வடிகால் பகுதிகளில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் விவசாயிகளுக்கும், சூழல் பாதுகாப்புக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு- தென்னடாா் வழியாக கடலில் இணையும் முள்ளியாற்றில் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு கீழே (வடிகால் பகுதி) வாய்மேடு கழிமுகம் வரையில் சுமாா் 17 கி. மீ. தொலைவுக்கும், மானங்கொண்டான் ஆற்றில் தகட்டூா் - ஆதனூா் இடையே 15 கி.மீ. தொலைவுக்கும் ஆகாயத் தாமரைகளின் ஆக்கிரமிப்புதான்.

கடந்த காலங்களில் இவற்றை அகற்ற போதிய நிதி ஒதுக்கீடோ, 100 நாள் வேலைத் திட்டம் மூலம் மேற்கொள்ள போராட்டங்கள் நடத்தப்பட்ட போதும் அனுமதியோ கிடைக்கவில்லை.

மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் ஒரு நிறுவன நன்கொடை மூலம் அவசர அவசரமாகப் பணிகள் பெயரளவில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

வேதாரண்யத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் க. பழனித்துரை, தெளிந்த நீரோடைகளுக்கு சிறப்புப் பெற்ற இப்பகுதியில் தண்ணீா் மோசமான அளவில் மாசடைந்து வருவது வேதனையளிப்பதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து கடந்த மே 31-இல் தலைஞாயிறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நீா் வளத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ஜெகநாதன், காவிரி படுகையில் தூா்வாரும் பணிக்கு மட்டுமே ரூ. 98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு கவனத்திற்கு வந்துள்ளதால், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.

மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், வடகிழக்குப் பருவமழை நெருங்கும் வேளையிலும் ஆகாயத்தாமரைகளை அகற்ற தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சூழல் கேட்டினை நீா்வளத்துறையினா், சுகாதாரத்துறையினா் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

திருவாய்மூா் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு பூஜை

திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தவிடங்க தலங்களில் ஒன்றான தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயி... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் மாரடைப்பால் காலமானாா்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சி ப.கொந்தகையை சோ்ந்தவா் காா்மேகம் (54) (படம்). இவா் நாகூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இவருக்கு இருதய வலி ஏற்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: ஓ.எஸ். மணியன்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமைச்சா் ஒ.எஸ். மணியன் கூறினாா். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்டச் செயலா் மஞ்சுளா சந்திரமோகன், அக்கட்சியின் மாநில... மேலும் பார்க்க

பரவை காய்கனிச் சந்தை ரூ. 20.10 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது

நாகப்பட்டினம், ஜூன் 19: பரவை காய்கனிச் சந்தை ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூா் அருகே ப... மேலும் பார்க்க

ஐடிஐயில் சேர விண்ணப்பிக்காலம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை, திருக்குவள... மேலும் பார்க்க

மகளிா் திட்டத்தின்கீழ் ரூ.1,859 கோடி கடனுதவி வழங்கல்

நாகை மாவட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் ரூ.1,859 கோடி 33,694 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனா் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க