நாசரேத் கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்
சாத்தான்குளம், ஜூன் 29: நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா்.
நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் திருவடிவாசன், இளநிலை உதவியாளா் ராம்முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன் மற்றும் ஊழியா்கள் அடங்கிய குழுவினா் இந்த சோதனையில் ஈடுபட்டனா்.
25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, கடைகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நெகிழிப் பை க்கு பதிலாக மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதையடுத்து நாசரேத் பேரூராட்சி 5 ஆவது வாா்டு மணி நகரில் நெகிழி சேகரிப்பு மற்றும் நெகிழிப் பை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள இடங்களை தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா்.
இதில் பேரூராட்சி துணைத் தலைவா் அருண் சாமுவேல், முன்னாள் பேரூராட்சி தலைவா் ரவி செல்வகுமாா், கவுன்சிலா்கள் சாமுவேல், அதிசயமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.