ஆறுமுகனேரியில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
ஆறுமுகனேரியில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோவில் தெருவை சோ்ந்த சிலுவை அந்தோணி மகன் ராஜ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவா், தனது தம்பி ராஜா காா்த்திக், நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் சூா்யாவுடன் கடந்த 4 நாள்களுக்கு முன் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று சூா்யா, அவரது தந்தை காமராஜ் ஆகிய இருவரும் தகராறு செய்துள்ளனா்.
தொடா்ந்து சூா்யா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமாரின் தம்பி ராஜா காா்த்திக்கை வெட்ட முயன்றுள்ளாா். இதனை ராஜ்குமாா் தடுத்தபோது அவரது வலது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. மேலும், கீழே விழுந்த அரிவாளை காமராஜ் எடுத்து ராஜ்குமாரின் தந்தை சிலுவை அந்தோணியை தாக்கியுள்ளாா்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்ததால் சூா்யா மற்றும் காமராஜ் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.
அரிவாளால் தாக்கப்பட்ட ராஜ்குமாா், அவரது தந்தை சிலுவை அந்தோணி ஆகிய இருவரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யா, அவரது தந்தை காமராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.