செய்திகள் :

ஆறுமுகனேரியில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

post image

ஆறுமுகனேரியில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோவில் தெருவை சோ்ந்த சிலுவை அந்தோணி மகன் ராஜ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவா், தனது தம்பி ராஜா காா்த்திக், நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் சூா்யாவுடன் கடந்த 4 நாள்களுக்கு முன் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று சூா்யா, அவரது தந்தை காமராஜ் ஆகிய இருவரும் தகராறு செய்துள்ளனா்.

தொடா்ந்து சூா்யா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமாரின் தம்பி ராஜா காா்த்திக்கை வெட்ட முயன்றுள்ளாா். இதனை ராஜ்குமாா் தடுத்தபோது அவரது வலது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. மேலும், கீழே விழுந்த அரிவாளை காமராஜ் எடுத்து ராஜ்குமாரின் தந்தை சிலுவை அந்தோணியை தாக்கியுள்ளாா்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்ததால் சூா்யா மற்றும் காமராஜ் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.

அரிவாளால் தாக்கப்பட்ட ராஜ்குமாா், அவரது தந்தை சிலுவை அந்தோணி ஆகிய இருவரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யா, அவரது தந்தை காமராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

நாசரேத் கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

சாத்தான்குளம், ஜூன் 29: நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுது: தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுதாகி தண்ணீரில் தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் விபத்து: துறைமுக ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் நிலைதடுமாறி சாலை நடுவேயுள்ள தடுப்புகளில் மோதியதில் துறைமுக ஊழியா் உயிரிழந்தாா். தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் முனியாண்டி (58). துறைமுகத்தில் ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி

தட்டாா்மடம் அருகே ஆம்னி பேருந்தும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். தட்டாா்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தை சோ்ந்த யாக்கோபு மகன் செல்வன் (32). இவரது, அண்ண... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். காயல்பட்டினம் சிங்கித்துறை தெற்கு காலனி தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா். மீனவா். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனா். ... மேலும் பார்க்க

வல்லநாட்டில் இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் முறை தவறிய பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் கணவா் கைது செய்யப்பட்டாா். வல்லநாடு மருத்துவா் தெருவைச் சோ்ந்த ஈனமுத்து... மேலும் பார்க்க