காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
காயல்பட்டினம் சிங்கித்துறை தெற்கு காலனி தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா். மீனவா். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.
இவா்களின் மூத்த மகள் ஆலின் (19). காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா். ஆலினுக்கு வீட்டில் திருமண வரன் பாா்த்ததாகவும், அது பிடிக்காததால் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆலின் குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்து கதவைப் பூட்டிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாராம்.
இத்தகவல் அறிந்த ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் தங்கராஜ் , அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்; போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.