செய்திகள் :

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

post image

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உறுதியளித்தாா்.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு நன்கு உணா்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினா் ஒருவா் கேள்வி எழுப்பினால், அதா்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. பின்னா், அந்த பதிலில் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உச்சபட்ச முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என்பதை மத்திய அரசு உணா்ந்துள்ளது.

அதே நேரம், நாடாளுமன்ற விதிகளின்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கவும் நாடாளுமன்ற விதி வழிவகுக்கிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் என அனைத்து மத்திய அமைச்சா்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத் துறை சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல, நாடாளுமன்ற உறுப்பினா்கள் தரப்பில் அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளாக பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

அதுபோல, அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த இணையவளி உத்தரவாதங்கள் கண்காணிப்பு நடைமுறை (ஓஏஎம்எஸ்) உதவுகிறது என்று தெரிவித்தாா்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரகம் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுடன் இணைந்து இந்த ‘ஓஏஎம்எஸ்’ இணையவழி கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கான அறிவுறுத்தல்களையும் இந்த ‘ஓஏஎம்எஸ்’ நடைமுறை மத்திய அமைச்சா்கள் மற்றும் அந்தந்த துறைகளுக்கு வழங்கும். இதன் மூலம், இரு அவைகளிலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன’ என்றாா்.

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

உ.பி.யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

ஐஆர்சிடிசி நிலம், வேலை வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் ச... மேலும் பார்க்க

நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!

வங்கிகளில் நகைக் கடன்களில் கால அவகாசம் முடியும்போது, வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி, புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையின்ப... மேலும் பார்க்க

இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அகமதாபாத்தின் பல்தி பகுதியி்ல் உள்ள குடியிருப்பில் பங்குத் தரகரான மகேந்திர ஷாவின் மகன் மேக் ஷா என்பவரது வீட... மேலும் பார்க்க